Friday, July 2, 2010

எல்லாம் அன்பு மயம்

எழுத ஆரம்பித்து 27 வருடங்கள் முடிந்து விட்டது. இதுவரை நூற்றுக் கணக்கில் சிறுகதைகள், தொடர் கதைகள், புதினங்கள், மாத நாவல்கள், ஆன்மீக கட்டுரைகள், என்று எழுதியாயிற்று எழுத்துக்களின் மூலம் நிறைய நண்பர்களைப் பெற்றிருக்கிறேன். வாசகர்களாக அறிமுகமாகி பின்னர் நெருங்கிய நண்பர்களாக மாறியவர்கள் அநேகம் பேர். ஒரு தவம் போல் உங்கள் கதைகளைப் படிக்கிறோம் என்று சிலர் கூறும் போது பயமாகவே இருக்கிறது.

என்னுடைய சில நெருங்கிய வாசக சிநேகங்களைப் பற்றி கூறியே ஆக வேண்டும். இவர்கள் எல்லோருமே எனக்கு மிக முக்கியமானவர்கள்தான். முதல் சினேகிதி திருச்சி பிச்சாண்டார் கோயிலில் வசிக்கும் திருமதி காமகோட்டி முத்துகிருஷ்ணன். இந்தக் குடும்பமே மிக உயர்ந்த உள்ளங்களுக்கு சொந்தம் கொண்டது. விருந்தோம்பலில் இவர்களை விஞ்ச எவருமில்லை.

அன்பு அன்பு அன்பு என எல்லாம் அன்பு மயம். மன நலம் குன்றிய ஒரு மகனை வைத்துக் கொண்டு மலர்ந்த முகத்தோடு குறையொன்றுமில்லை என வளைய வரும் பண்பு எளிதில் எவருக்கும் சாத்தியமில்லை. ஒரு தெய்வ விக்கிரகத்தைப் போல அந்த மகனை அனைவரும் அங்கு அன்போடு ஆராதித்து வருகிறார்கள். இவரிடம் பிறருக்குக் கொடுப்பதற்கு அன்பைத்தவிர வேறெதுவும் இல்லை.

இறைமையின் மீது திடீர் திடீரென இவரது வாயிலிருந்து பாடல்கள் வெள்ளமாய்ப் பெருகிவரும். இவரது கணவர் அமைதியானவர். தீமை என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத நல்லவர். இவரது மற்றொரு மகன் கார்த்திக் பொறியியல் மாணவர். மைக்ரோசாப்ட் நடத்திய ஒரு போட்டியில் பரிசு வென்ற புத்திசாலி. இவர்களுடைய விருந்தாளியாக இரண்டு முறை சில நாள் திருச்சியில் எனது சில நண்பர்களோடு சென்று தங்கியிருக்கிறேன். அப்போது இவர்களது விருந்தோம்பல் இப்போது நினைத்தாலும் என் கண்ணில் கண்ணீர் மல்குகிறது.

ஒவ்வொரு தீபாவளிக்கும் இவரிடமிருந்து கண்டிப்பாக ஒரு பரிசு வந்து விடும். இப்பேர்ப்பட்ட மனிதர்களை நண்பர்களாகப் பெற்றது என் எழுத்துக்களால் அல்லவா? என்னை எழுத்தாளியாக்கிய இறைமைக்கு நன்றி சொல்வதைத் தவிர வேறென்ன சொல்ல!


அடுத்தது, திருமதி சுசிலா அரவிந்தன். இவரும் திருச்சிதான் காமகோட்டியின் தோழி. என் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் கொண்ட கருப்பழகி. என் கதைகளில் வரும் கதாபாத்திரங்களைபோல அன்பானவர். நல்ல கவிதாயினி. விழுந்து விழுந்து இவர் எனக்கு வரைந்து அனுப்பும் வாழ்த்து மடல்கள் அனைத்தும் என்னை வியக்க வைக்கும். கடிதங்களில் நிறைய பேசுபவர், நேரில் வெறுமனே என்னைப் பார்த்துக் கொண்டிருப்பார்.

நான் கிருஷ்ண பக்தை என்பதைத் தெரிந்து கொண்டு சென்ற முறை திருச்சிக்கு வந்த போது இவர் வாங்கிக்கொடுத்த குட்டி கிருஷ்ணன் என் பூஜை அறையிலிருந்து தினமும் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறான்.


ஒவ்வொரு முறை திருச்சிக்கு வரும்போதும் எனக்கு வாசகர்கள் கூடிக்கொண்டு போவது போல் தோன்றுகிறது. திருச்சி எனது தாய் வீடு மாதிரி ஆகிவிட்டது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் தங்கள் அன்பைக் காட்டும்போது மனம் நெகிழ்ந்து போகிறது. மொத்த திருச்சியுமே அன்பு மயமாய்த் தெரிகிறது.

காவேரி கூட மழைக் காலத்தில்தான் நிரம்பும். இவர்களது அன்பு என்றும் வற்றாத ஜீவநதி. ஸ்ரீரங்கம் கோவிலில் இரண்டு மணி நேரம் எனக்காக காத்திருந்து ஒரு ரங்கநாதர் படத்தை பரிசளித்து விட்டுப் போனார் ஒரு வாசகி. மற்றொரு வாசகிக்கு வயது எழுபதுக்கு மேல். இவர் எனக்காக வாசனைப் பொடி அரைத்து எடுத்துக் கொண்டு வந்து நீ குளிக்கும்போதெல்லாம் என்னை நினைத்துக் கொள்ள வேண்டும் என்ற போது அழுகை வந்தது.

ஒரு பெண்மணி எனக்குக் கொடுத்த அன்பளிப்பு வியப்பானது. தனது பழைய புடவையில் மிக அழகாக வட்ட வடிவில் ஒரு மிதியடியை தானே பின்னி கொண்டு வந்திருந்தார். அந்த அன்பைக் காலால் மிதிக்க முடியாமல் எனதுகணிப்பொறி அமர்வானில் போட்டு உபயோகிக்கிறேன்.

எனது அம்மா பிள்ளை நாவலைப் படித்து விட்டு எனது வாசக சிநேகிதியாய் மாறியவர் விஜயலஷ்மி. தானும் தனது மகனும் அந்த அம்மா பிள்ளையைப் போலதான் பேசிக் கொள்வோம் என்று வியந்தார். என்னுடைய அத்தனை புத்தகங்களும் காசு கொடுத்து வாங்கிப் படிப்பதில் இவருக்கு அலாதி ஆனந்தம். மிகுந்த புரட்சிகரமான சிந்தனைகளைக் கொண்டவர்.

இவரது ஒரே மகன் சத்யா கடற்படையில் உயரதிகரியாய் இருக்கிறார். சத்யா என்ற பெயருக்கு ஏற்றாற்போல் சத்தியமும் நேர்மையும் தேச பக்தியும் நிறைந்தவர். பகத்சிங்கை உதாரண புருஷனாய் நேசிப்பவர். முதலில் அந்தமானில் பணி புரிந்து விட்டு தற்போது மும்பையில் பணியில் உள்ளார். சத்யாவின் திருமணத்திற்குப் போயிருந்த எனக்கு விஜயலஷ்மி ஒரு புடவை அளித்த போது ஆச்சர்யப்பட்டேன். எதற்கு என்றேன். என் குடும்பத்தில் ஒருத்தியாகத்தான் நான் உன்னை நினைக்கிறேன் என்றார். எழுத்தளாராக மலர்ந்ததற்காக நான் கொஞ்சம் கர்வமும் நெகிழ்ச்சியும் அடைந்த தருணம் அது.

இவரிடம் பேசிக்கொண்டிருந்த ஒரு சமயம் நான் இவரிடம் பேசுகையில் நான் எழுதிய " முதல் கோணல் " என்ற எனது முதல் சிறுகதை என்னிடமே இல்லை என்று சொன்னேன். அதற்கென்ன கொடுத்தால் போயிற்று என்றார். அடுத்த இரண்டாவது நாள் தபாலில் வந்து சேர்ந்தது என் முதல் கோணல். பொக்கிஷமாக பத்திரப் படுத்தி வைத்துக் கொண்டேன். இந்த அன்புக்கெல்லாம் என் எழுத்துக்களை சமர்ப்பணம் செய்வதைத் தவிர வேறென்ன நான் செய்ய? ஒன்று புரிகிறது. ஒரு எழுத்தாளரின் ஆன்மா நல்ல வாசகர்கள்தான். ஆன்மாவுக்கு அழிவில்லை. அதுவே உயர்ந்தது.

15 comments:

எல் கே said...

வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதவும்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Thank You L.K

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி . பதிவு சிறப்பு . தொடரட்டும் உங்களின் எழுத்துப் பயணம்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி சங்கர். எனது வலைப்பூவிற்கு வந்து பின்னூட்டம் அளித்ததில் மகிழ்கிறேன். அடிக்கடி வாருங்கள்.

கோவை குமரன் said...

நன்றி கதையின் கதை என்ற தலைப்பு இந்த பகிர்விற்கும் பொருந்தும்..அழகிய
ஆன்மாவக தொடர விரும்பும் சதீஷ்

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Thank you for the comment

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எழுத்துக்கு இவ்வளவு மரியாதையா??
என்னை மேலும் எழுதத் தூண்டும் எழுத்துக்கள் இவை!!! நன்றி, மேடம்!!

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

hello maam,
I am a big fan of your novels.
Even i dont know how many times I have read your novels like vittil poochigal, gopura kalasangal, agaya malargal, ninnai charan adainthen. whenever am disturbed, i used to read your novels only maam. it gives immense relieve from my probs mentally. hats off to you mam. keep on writing. and you r looking very simple but subtle as like ur stories. the way u quote the realistic lines in ur stories is awesome. even i have noted down in my diary and used to read whenever i need some solns for my prob. thanks a lot maam. Wish you all success in your life. let me take it as a chance to express myself in this blog.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

Thank You katta. Nice letter. Where are you and what are you. Pls. keep in touch

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

hello maam,
sorry my name is sathish.
am doing my masters degree in iit bombay. so now in bombay only.
i wonder how did u get/remember so many beautiful realistic lines and how u have used all those in your novels at the right time maam.
and not only myself my mother is also a big fan of yours and she used to read your books and get herself clear whenever she is disturbed and we used to wonder for Ur lines.
right to say v both r mesmerized when v read your novels.
If u can send me mail or tell me your id madam. this is my id sathi3030@gmail.com
I can be in touch with u through mails

Kailai Bala said...

Dear Vidya Subramaniam, beautifully written testimonial of your recent Kailash yatra. I thoughly enjyed reading it at the same time you created another opportunity to do Kailash yatra through you writings. Vey interesting.

It is often said that one can be removed from Kailash but Kailash cannot be removed from you. It is very very true for me and my friends. Todate I had made 3 yatras to the Holy wonderland and I am deeply in love with this spiritual place.

Although been to the Saptharishi cave twicw this heart longs to be there again and again. Thank you for the wonderful photos and if you are interested please read my blog on Kailash yatra. 2007 and 2009 is the and soon I will be writing my recent yatra ib July August this year.

My e mail kailaibala@gmail.
if you wish you can send yours.

Om Na masivaya

Unknown said...

Hi Maam,

I have read about your Kailash trip which is really amazing. We have been there in the year 2007. We would like to know about your Aadhi kailash trip and we are group of people from singapore planning to go in the year 2011.If possible please guide us by which travel you all went and how you all went. Thanks. Uma Singapore

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

டியர் உமா நன்றி. ஆதி கைலாஷ் யாத்திரை செல்ல விரும்பி இருப்பது குறித்து சந்தோஷம். டெல்லியில் Kumaun mandal (Tourism of uththaraanchal) aluvalagam மூலம் பதிவு செய்து கொண்டு செல்லலாம். அவர்களே யாத்திரை குறித்து விளக்குவார்கள். இந்திய வழியில் கயிலாயம் மானசரோவர் செல்லுகிறவர்கள் செல்லும் வழியில்தான் இந்த யாத்திரையும் அழைத்துச் செல்வார்கள். இந்திய சீன எல்லையில் ஓம் பர்வதம் இருக்குமிடம்தான் இறுதி தங்குமிடம். அதற்குப் பிறகு அனுமதி இல்லை.