
நேற்று இரவு ஒன்பதரை மணிக்கு கற்றலும் கேட்டாலும் ராஜி என் கைபேசிக்கு அனுப்பி இருந்த குறுஞ்செய்தியை இன்று காலை எட்டு மணிக்குதான் பார்த்தேன்.  ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி மேற்படி விருதுகளை எனக்கு அளித்திருப்பதாக ராஜி செல் போனிலும் அழைத்து சொல்ல ரொம்ப நாள் கழித்து மீண்டும் பதிவுப் பக்கம வந்திருக்கிறேன்.   இரண்டு மாதமாய் நான் பதிவு எழுதாத கரணம் குறித்து ஒரு பதிவே எழுதி விடுகிறேன்.   என் கால்கள் நன்கு குணமாகி விட்டது என்பதையும் மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்கிறேன். இனி எனக்குப் பிடித்த விஷயங்கள்.
இசை மழை எந்நேரமும் வேண்டும். (கர்நாடக இசை, மலையாள திரை இசை, பழைய தமிழ் திரைப் பாடல்கள்)
நிஜ மழையும் பிடிக்கும்.  கொட்டும் மழை, மெலிதாய் குழலிசை, கையில் தி.ஜா.வின் புத்தகம்  வேறென்ன சுகம் வேண்டும்?
குழந்தைகள்.   இந்த விஷயத்தில் நான் நேருவுக்கு அக்கா.  எந்தக் குழந்தையைப் பார்த்தாலும் எனக்குள் ரோஜாக்கள் மலரும். என் வீட்டின் இரட்டை ரோஜாக்கள்தான்  இப்போது  என் சொர்க்கம்.
நல்ல திரைப் படங்கள் -  மொழி பேதமின்றி நல்ல படங்களை தேடித் பார்ப்பது வழக்கம்.  சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த படம்  "Pursuit of Happiness"
நட்பு -  நான் மிகவும் மதிப்பளிக்கும் விஷயம் நட்பு.  நான் மிக உண்மையான நட்பை கொடுப்பவள். எதிர்பார்க்கிறவள்.    என் நட்பு வாழ்நாள் முழுவதும் தொடரும் நட்பாகவே இருக்கும்.  என்னுடைய ஒவ்வொரு நட்பும் நண்பர்களும் உயர்ந்தவை.   என் குழந்தைப் பருவத்து தோழியோடு இன்றளவும் இறுக்கமான நட்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.  அனைத்து உறவுகளுக்குள்ளும் உறவு மீறிய நட்பிருத்தல்  அவசியம் என எண்ணுபவள்.  
எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும் என்பதன் படி  இந்த விருதுத் திருவிழா பதிவுலகில் நடந்து கொண்டிருக்கிறது என நினைக்கிறேன்.  இதுவும்  ஒரு சந்தோஷம்தான்.  காக்கைக் கூட்டமாய் பகிர்ந்து கொள்வோமே.
நான் விருதளிக்கவிழைவது.
கோபி ராமமூர்த்தி.  http://ramamoorthygopi.blogspot.in/2012/02/2.html
இவர்கள் எல்லோரும் ஏற்கனவே விருது வாங்கி விட்டார்களா எனத் தெரியாது. 
இருந்தாலும் நானும் அளிக்கிறேன்.
இந்த விருதுத் திருவிழாவில் அதிகபட்ச விருதுகள் பெறுபவருக்கு இப்பவே எனது அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
மீண்டும  என்னை ஒரு அவசர பதிவெழுத வைத்த ஆரண்ய நிவாசிற்கு எனது நன்றி.