Thursday, December 25, 2014

என்ன செய்தேன் இந்த ஆண்டில்?

மேலும் ஒரு ஆண்டு முடியப்போகிறது.   என்ன செய்தேன் சென்ற ஆண்டில்?
பெரிதாய் ஒன்றுமில்லை என்றாலும் ஒன்றுமேயில்லை என்றும் சொல்லி விட முடியாது.   இரண்டு ஓவியங்கள் முடித்தேன்.     நான்கைந்து சிறுகதைகளும்,   ஒரு குறுந்தொடரும்,  ஒன்றிரண்டு கட்டுரைகளும் எழுதனேன்.  FB யில் நிறைய விஷயங்கள் பகிர்ந்து கொண்டேன்.  நிறைய நட்புகளை சம்பாதித்துக் கொண்டேன்.    தவறான  பிறந்த தேதியால்   இரண்டு வருடம் முன்னாலேயே  நல்லபடியாய்  பணி ஓய்வு பெற்றேன்.

கவிதாவின் கல்யாணத்தை நல்லபடியாக நடத்தினேன்.  குழந்தைகளுடன் நிறைய நேரம் செலவழித்தேன். அவர்களிடமிருந்து பல விஷயங்கள் கற்றேன்.    நிறைய சங்கீதம் கேட்டேன்.   தங்கையின் மரணத்தில் நிலை குலைந்தேன்.   இரண்டு முறை  குருவாயூர்  போய் வந்தேன்.

கொஞ்சம்  புத்தகங்கள் வாசித்தேன்.    திரை (கன்னடம்) (S.L. பைரப்பா) தமிழில் ஜெயா வெங்கட்ராமன்,     அரசூர் வம்சம்  - இரா.முருகன்.,     6174 -  சுதாகர் கஸ்தூரி,  எழுத்தும் வாழ்க்கையும் - அகிலன்.     இந்தியப் பிரிவினை -- மருதன், திருமந்திர விளக்கம் - ஜி.வரதராஜன்     காங்கிரஸ் சரித்திரம்  - அல்லயன்ஸ்  வெளியீடு.     விஸ்வரூபம்  - படித்துக் கொண்டிருக்கிறேன்    

இது போதுமா ?  எழுதுவதற்கும்,  வாசிப்பதற்கும், வரைவதற்கும்  ஏகப்பட்டது கொட்டிக் கிடக்கிறது.   எவ்வளவு படித்தாலும் கையளவுதான்,  எவ்வளவு எழுதினாலும் அதுவும் கையளவுதான்.   நான் வாசித்ததும்  எழுதியதும்,  ஒரே ஒரு ஒற்றை மணற் துகள் அளவுதான்.   சக்தி கொடு தெய்வமே.  இன்னும் ஒரே ஒரு துகள் அளவாவது வாசிக்கவும்,  அறியவும்,  எழுதவும்.

கீழே  இந்த ஆண்டில்  நான் வரைந்த ஓவியங்கள்


3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவியங்கள் யப்பா....! பிரமாதம்... தொடர வாழ்த்துக்கள்...

'பரிவை' சே.குமார் said...

ஓவியங்கள் அருமை அம்மா...

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி தனபாலன், குமார்