Wednesday, December 17, 2014

குசேல தினம்

இன்று  தனுர் மாதத்தின் முதல் புதன் கிழமை.  இது குசேல தினம்.  குசேலன் ஒரு பிடி அவலோடு  தன பால்ய தோழன் கிருஷ்ணனை  சந்திப்பதற்கு துவாரகைக்கு சென்ற தினம்.   குருவாயூரில் இன்று மிகவும் விசேஷமான நாள்.   கிருஷ்ணனுக்கு அவல்  நெய்வேத்தியம்  சிறப்பாக நடக்கும்.  அவல்  சமர்ப்பணமும்  செய்யப்படும்.   ஒரு பிடி அவலோடு  என் மனசும்  அங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கிறது .  என் கர்ம வினைகளை எல்லாம்  ஒரு பிடி அவலாக்கி,   கட்டி எடுத்துக் கொண்டு அவன் காலடியில் சமர்ப்பிக்க அலைந்து கொண்டிருக்கிறேன்.

இந்த சமர்ப்பணம் பொன்னும் பொருளும், மாட மாளிகையும்  யாசித்தல்ல.   அவன்  திருமுடி பீலியில் ஒரு இழையாய், பாதத்தில் ஒரு பூவிதழாய்,  அபிஷேக நீரில் ஒரு துளியாய்,  அந்த மதிலக சுற்று விளக்குகளில் ஒரு விளக்காய்,  கொட்டிக் கிடக்கும் மஞ்சாடி மணிகளில் ஒரு மணியாய்,  பால் பாயசத்தில்  துளி இனிப்பாய்,  ஏற்றுக் கொள்ளக் கோரும் யாசகம். எத்தனை புண்ணியம் செய்திருக்க வேண்டும் இதற்கெல்லாம்.!  செய்திருக்கிறேனா?  இன்னும் எத்தனை ஜென்மம் காத்திருக்க வேண்டும் இதற்கு!

வறுமையில் வாடும் குசேலன்

  பால்ய தோழர்கள்


துவாரகைக்கு அவல்  பொதியோடு செல்லும் குசேலன்


 குசேலனை வரவேற்கும் கிருஷ்ணன்

     நண்பனைக்  கட்டி அணைக்கும் கண்ணன்

 
 அவல்  பொதியைத தானே எடுத்துக் கொள்ளும் கிருஷ்ணன்



கால் அலம்பி மரியாதை செய்யும் மாயவன்

   மஞ்சாடி கண்ணன்


  ஹரே கிருஷ்ணா.  குருவாயூரப்பா!

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஹரே கிருஷ்ணா. குருவாயூரப்பா!

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
விளக்கமும் சிறப்பு படங்களும் அழகு பகிர்வுக்கு நன்றி
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:

கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான படங்களுடன் அழகான விளக்கம்...

'பரிவை' சே.குமார் said...

ஹரே கிருஷ்ணா..

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

நன்றி ராஜராஜேஸ்வரி, ரூபன், தனபாலன், செ. குமார்.