Sunday, June 8, 2014

முகநூலில் (Facebook )  எல்லாரும்   ஏதோ பத்து பேர் லிஸ்ட் போடறாங்களாமே.  (அவங்கதான் சிறந்த இலக்கிய படைப்பாளியாம்)  நானும் போடப்  போறேன்  ஓடி வாங்க.   அந்த பத்து பேர் யாருன்னா, .... அடடா  முதலாவது   ஆள  அறிமுகப்படுத்தலாம்னு பார்த்தா  தண்ணிய விட்டு வெளிய வந்தாத்தானே?    சரி அதுக்குள்ளே ரெண்டாவதைத்  தேடினா, இவர் நடந்து வர வேகத்துக்கு கலியுகமே  முடிஞ்சுடும் போல இருக்கே!
மூணாவது மனுஷனைக் கூப்ட்டா  சாக்கடைய விட்டு வர மாட்டாராம்.  நாறுதுன்னு  சொன் னா  முறைக்கறார்.     நாலாவது ஆளு கிட்ட போனா, அ டப்பாவி  நேரங்கெட்ட நேரத்துல நர மாமிசமா?  சாவகாசமா ஒரு ஆளோட (மஞ்சா  சோறாம்) எடுத்துட்ருக்கார்.    போங்கடான்னு அஞ்சாவது ஆளப் பார்த்தா,  நின்னு  பேசினாத்தானே? தம்மாத்தூண்டு இருந்துக்கிட்டு  யார் தலைல கால வெக்கலாம்னு ஓடிட்ருக்கார்.      சரி நீயாவது வாப்பான்னு ஆறாவது மனுஷனைக் கூப்ட்டேன்.  அப்பா சொன்னாத்தான் வருவாராம், அப்பாட்ட உத்தரவு கேளுங்கன்றார்.  படுத்தறயேன்னு  எப்டியாவது ஏழாவதைக் காட்டிடலாம்னு பார்த்தா அவர் பயங்கர பிசி.   பொண்டாட்டியக் காணும்னு    ஊர் ஊரா தேடி அலஞ்சு ட்ருக்கார்.  எ ட்டாவது ஆளு  தம்பிக்காரனுக்கு பாதுகாப்பா கைய கட்டிக்கிட்டு போயிட்டாராம்
தம்பிக்காரன் அப்டி என்ன கிழிக்கறான்னு பாத்தா  சாமி...! அவனப் புரிஞ்சு க்கவே முடியலப்பா.    சுத்தி பொம்பளைங்க.  டான்ஸோ  டான்சு.  ஒரு நேரம் என்னடான்னா   பெரிய பெரிய பேச்செல்லாம் பேசறான். இன்னோரு  நேரம்  வாயத்தொறந்தா பொய்யி.  ம்ஹும் இவன் சரிப்பட மாட்டான்.  சரி பத்தாவதையாவது காட்டுன்னு நீங்க கெஞ்சறது  எனக்கு கேக்குது.   அவனைத்தான் நானும் தேடிட் ருக்கேன்,    ஹலோ  மிஸ்டர் நாராயணன்  காதுல விழுந்துதா?  பத்தாவது எப்போ?   ஆச்சா?  இல்ல  இனிமேத்தானா?    பதில சொல்லுப்பா கேக்கறாங்க இல்ல?   ம்ஹும்  சரி  கொறட்ட ! பாம்பணைலயே இந்த தூக்கம்னா, கர்லான்  வாங்கிக் குடுத்தா நாங்க காலி போல்ருக்கே.   அட எங்கயோ குளம்புச் சத்தம் கேக்கறா மாதிரி இல்ல? அஹா  வந்துட்டான் யா வந்துட்டான்! எனக்கு த் தெரிஞ்சு போச்சு. அவனேதான்.  வா ராசா  உனக்காகத்தான் காத்து ட்ருக்கோம்  எம்புட்டு வேல இருக்கு.இங்க?   மொத வேல என்ன தெரியுமா?  தன்னுதுதான்   சூப்பர்   இலக்கியம்னு சொல்லிக்கிட்டு திறியாராங்க பாரு அவிங்ககிட்டேர்ந்து எங்களைக் காப்பாத்துடா சாமி!  மீசைய முறுக்கிட்டு நிக்காம போய்  சொன்னத செய் பார்ப்போம்.  என்னாது?... குதிரை காய்ஞ்சு கிடக்கா?  கொள்ளு வேணுமா? அதுக்கு நா எங்க போவேன்?  இங்க நாங்க திங்கவே அரிசியைக் காணுமாம். நெல்லு வெளஞ்ச நிலத்துலல்லாம்   வீடு மொளச்சிருக்கே பாக்கல?  கொள்ளு கிள்ளு எல்லாம் கேக்கப்படாது. சொன்ன  வேலைய கவனி சொல்லிப்புட்டேன்!